பீகார் மானிலத்தில் ஒரு வயதுக் குழந்தை விளையாட்டு பொருள் என நினைத்து பாம்பைக் கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகாரில் உள்ள ஜமுகர் கிராமத்தில் கடந்த வாரம் இச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அம்மானிலத்தில் மழைக்காலத்தில் இவ்வகையான பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.