நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையில் பயிலுனர் பட்டதாரிகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இக்கடிதத்தில் கீழ்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018/2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு ஏற்கனவே அரசாங்க நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்ற பயிலுனர்களை சுகாதார வழிகாட்டல்களுக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான ஏற்பாடுகளுக்கும் உட்பட்ட வகையில் அத்தியவசியமான பணிக் கடமைகளுக்காக அழைக்க முடியும்.
குறித்த பயிலுநர்களை அத்தியாவசிய சேவைகளுக்காக அழைத்தல், விடுமுறை வழங்குதல் மற்றும் சேவையைப் பெறுதல் தொடர்பில் 02/2021 (II) ஆம் இலக்க பொது நிருவாகச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க பயிலுநர் கொடுப்பனவுகளைச் செலுத்தும் போது, ஒரு அத்தியவசிய விடயத்திற்காக சேவைக்கு அழைக்கப்பட்டு, முறையான அனுமதி பெறாமல் பயிற்சிக்குச் சமுகமளிக்காத நாட்கள் இருப்பின், அந்த நாட்களை மாத்திரமே சம்பளமற்ற லீவு நாட்களாகக் கருத வேண்டும். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.