Friday, October 29, 2021

Development Officer III EB Exam 2021

தரம் III இலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டாவது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமா?



பதில்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் I ஆவது வினைத்திறன்காண் தடைதாண்டல்
பரீட்சை – 2016 (I) 2021 இற்கு விண்ணப்பங்கள் அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் கோரப்பட்டுள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் III ஆம் (Development Officer III) தரத்திலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையானது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2022, பெப்புருவரி மாதத்தில் நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், இணைய வழி முறைமையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக பரீட்சைக்கு முகங்கொடுக்கும் விண்ணப்பதாரிகள் மற்றும் அதற்கு மேலாக பரீட்சைக்கு முகங்கொடுக்கும் விண்ணப்பதாரிகளுக்குமாக இணையத்தளத்தில் வெவ்வேறான நிகழ்நிலை விண்ணப்பப்படிவங்கள் இரண்டு வெளியிடப்பட்டுள்ளன. அலுவலர் தாம் தோற்றும் முறை ஒழுங்கின்படி பொருத்தமான விண்ணப்பத்தை தெரிவு செய்தல் வேண்டும்,

விண்ணப்பங்களை இணைய வழி ஊடாக (Online Application) அனுப்பியதன் பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதியை விண்ணப்பதாரியின் கையொப்பத்தை உறுதிப்படுத்தி நிறுவனத் தலைவரின் சான்றுப்படுத்தலுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்திற்கு அல்லது அதற்கு முன்னர் ”பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், தாபன பரீட்சைகள் ஒழுங்கமைப்புக் கிளை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், த. பெ. இல. 1503, கொழும்பு”” என்ற முகவரிக்கு கிடைக்கக் கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

மற்றும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் I ஆவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2016( I) 2021 என தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2021, நவெம்பர் மாதம் 29 ஆந் திகதியாகும்.

Online Application

விபர வர்த்தமானி